/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விடுமுறை இன்றுடன் நிறைவு கரூர் பஸ் ஸ்டாண்டில் குவிந்த பொதுமக்கள்
/
விடுமுறை இன்றுடன் நிறைவு கரூர் பஸ் ஸ்டாண்டில் குவிந்த பொதுமக்கள்
விடுமுறை இன்றுடன் நிறைவு கரூர் பஸ் ஸ்டாண்டில் குவிந்த பொதுமக்கள்
விடுமுறை இன்றுடன் நிறைவு கரூர் பஸ் ஸ்டாண்டில் குவிந்த பொதுமக்கள்
ADDED : ஜன 19, 2025 01:51 AM
விடுமுறை இன்றுடன் நிறைவு கரூர் பஸ் ஸ்டாண்டில் குவிந்த பொதுமக்கள்
கரூர்,:பொங்கல் பண்டிகை விடுமுறை, இன்றுடன் நிறைவு பெற்றதால், நேற்று பொதுமக்கள், மாணவ, மாணவியர் பல்வேறு ஊர்களுக்கு செல்ல கரூர் பஸ் ஸ்டாண்டில் குவிந்தனர்.
தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் கடந்த, 13ல் போகியுடன் தொடங்கியது. சூரிய பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கலுக்காக கடந்த, 14 முதல் விடப்பட்ட, அரசு விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுகிறது. நாளை முதல் வழக்கம் போல், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும். இதனால், தொடர் விடுமுறையில் இருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர், பணிபுரியும் பணியாளர்கள் பல்வேறு ஊர்களுக்கு செல்ல, நேற்று காலை முதல் கரூர் பஸ் ஸ்டாண்டில் குவிந்தனர்.

