காணியாளம்பட்டி பிரிவு அலுவலகத்தில் கணக்கீடு பணி இல்லை: பொறியாளர்
காணியாளம்பட்டி பிரிவு அலுவலகத்தில் கணக்கீடு பணி இல்லை: பொறியாளர்
ADDED : ஜன 25, 2025 01:21 AM
அ நிறம் | அளவு
காணியாளம்பட்டி பிரிவு அலுவலகத்தில் கணக்கீடு பணி இல்லை: பொறியாளர்
கரூர், :காணியாளம்பட்டி பிரிவு, மின் அலுவலகத்தில், நிர்வாக காரணங்களால் கணக்கீடு பணி மேற்கொள்ள இயலவில்லை என, கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மின் பகிர்மான வட்டம், கரூர் கோட் டத்துக்குட்பட்ட, புலியூர் உபகோட்டம், காணியாளம்பட்டி பிரிவு அலுவலகத்தில் நிர்வாக காரணங்களால், கணக்கீட்டு பணி மேற்கொள்ள முடியவில்லை. எனவே, நடப்பு ஜனவரி மாதம் மின் கட்டணம் செலுத்தும் நுகர்வோர், கடந்த நவ., மாத மின் கட்ட ணத்தையே செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
