sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் மாவட்டத்தில் நாளை முதல் தேசிய குடற்புழு நீக்க முகாம்

/

கரூர் மாவட்டத்தில் நாளை முதல் தேசிய குடற்புழு நீக்க முகாம்

கரூர் மாவட்டத்தில் நாளை முதல் தேசிய குடற்புழு நீக்க முகாம்

கரூர் மாவட்டத்தில் நாளை முதல் தேசிய குடற்புழு நீக்க முகாம்


ADDED : பிப் 09, 2025 01:03 AM

Google News

ADDED : பிப் 09, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் மாவட்டத்தில் நாளை முதல் தேசிய குடற்புழு நீக்க முகாம்

கரூர்:கரூர் மாவட்டத்தில், தேசிய குடற்புழு நீக்க முகாம் நாளை (10ம் தேதி) முதல், 17 வரை நடக்கிறது.

இதில், 1 வயது முதல் 19 வயதிற்குட்பட்ட இரண்டு லட்சத்து, 39 ஆயிரத்து, 236 பேருக்கும், 20-- 30 வயதுடைய, 80 ஆயிரத்து, 627 பெண்கள் (கர்ப்பிணி பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள் தவிர்த்து பிற பெண்களுக்கு) ஆகியோருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக மாத்திரை வழங்கப்படும். பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு, அங்கன்வாடி பணியாளர்களின் மூலமாக மையத்திற்கு அழைத்து வந்து, குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும். ரத்த சோகை குறைபாடு வராமல் தடுக்க முடியும். குடற்புழு தாக்கத்தினால், உடல் நலம் பாதிக்கப்பட்டு மாணவ, மாணவியரின் பள்ளி வருகை பாதிக்கப்படாமல் தவிர்க்கப்படும்.

இத்தகவலை, கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us