sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரவுண்டானாவில் இருந்த தடுப்பு கம்பி அகற்றம்குப்பையாக கிடக்கும் திருக்குறள் இரும்பு பலகை

/

ரவுண்டானாவில் இருந்த தடுப்பு கம்பி அகற்றம்குப்பையாக கிடக்கும் திருக்குறள் இரும்பு பலகை

ரவுண்டானாவில் இருந்த தடுப்பு கம்பி அகற்றம்குப்பையாக கிடக்கும் திருக்குறள் இரும்பு பலகை

ரவுண்டானாவில் இருந்த தடுப்பு கம்பி அகற்றம்குப்பையாக கிடக்கும் திருக்குறள் இரும்பு பலகை


ADDED : மார் 25, 2025 01:04 AM

Google News

ADDED : மார் 25, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரவுண்டானாவில் இருந்த தடுப்பு கம்பி அகற்றம்குப்பையாக கிடக்கும் திருக்குறள் இரும்பு பலகை

கரூர்:கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, ரவுண்டானாவின் தடுப்பு அகற்றப்பட்ட நிலையில், அதில் இருந்த திருக்குறள் எழுதிய இரும்பு பலகை வீசப்பட்டுள்ளது.

கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், ரவுண்டானா சீரமைப்பு பணி, 2020ல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பொதுமக்கள் மற்றும் அலுவலர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ரவுண்டானாவை சுற்றிலும் திருக்குறள்களை எழுத வேண்டும் என்று, அப்போதைய கலெக்டர் அன்பழகன் உத்தரவிட்டார். ரவுண்டானா தடுப்பு கம்பிகளில் உள்ள இரும்பு பலகையில், திருக்குறளை மக்கள் படிக்கும் வகையில் எழுதப்பட்டு இருந்தது.

தற்போது, ரவுண்டானாவில் உள்ள தடுப்பு கம்பிகள் அகற்றப்பட்டுள்ளன. அந்த கம்பிகளுடன் இரும்பு பலகையும், வளாகத்தில் ஒரு பகுதியில் குப்பை போல குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், திருக்குறள் எழுதி வைக்கப்பட்டுள்ள இரும்பு பலகை சேதமடைந்து வருகிறது. எந்த காரணத்திற்காக, ரவுண்டானா தடுப்பு கம்பிகள் அகற்றப்பட்டன என தெரியவில்லை. மீண்டும் ரவுண்டானாவில் தடுப்பு கம்பி வைத்து, இரும்பு பலகையில் திருக்குறள் புதிதாக எழுத வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us