/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் மஞ்சமேடு வாய்க்காலில் ஆகாயத்தாமரை
/
கிருஷ்ணராயபுரம் மஞ்சமேடு வாய்க்காலில் ஆகாயத்தாமரை
ADDED : மே 05, 2024 02:23 AM
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
மஞ்சமேடு வாய்க்காலில், அதிகமான ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து
வருவதால் தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம்
அடுத்த, மஞ்சமேடு அருகில் சிறிய பாசன வாய்க்கால் செல்கிறது.
வாய்க்காலில் செல்லும் தண்ணீர் மூலம் விவசாயிகள் வாழை, வெற்றிலை
பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது சிறிய பாசன
வாய்க்காலில், அதிகமான ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து வருகிறது.
இதனால் குறைந்த தண்ணீர் மட்டும் வாய்க்காலில் செல்கிறது. எனவே,
வாய்க்காலில் வளர்ந்து வரும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற, தேவையான
நடவடிக்கைகளை பஞ்சாயத்து நிர்வாகம் எடுக்க வேண்டும்.