/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நடந்து சென்றவர் மீது கார் மோதி தொழிலாளி பலி
/
நடந்து சென்றவர் மீது கார் மோதி தொழிலாளி பலி
ADDED : அக் 20, 2024 01:53 AM
நடந்து சென்றவர் மீது
கார் மோதி தொழிலாளி பலி
குளித்தலை, அக். 20-
நடந்து சென்றவர் மீது, கார் மோதி தொழிலாளி பலியானார்.
குளித்தலை அடுத்த, கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னப்பன், 60. நேற்று முன்தினம் இரவு திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், மாயனுார் காட்டூர் பிரிவு ரோடு அருகே சாலை ஓரமாக நடந்து சென்றார்.
அப்போது, திருச்சியில் இருந்து கரூர் நோக்கி வந்த போர்டு கார் அதிவேகமாக வந்து, சின்னப்பன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பரிசோதித்த மருத்துவர், இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து அவரது தம்பி செல்வம், 57, கொடுத்த புகார்படி மாயனுார் போலீசார், அரவக்குறிச்சி ஊத்துப்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் முருகானந்தம், 36, மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.