sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின்சார சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி

/

மின்சார சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி

மின்சார சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி

மின்சார சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி


ADDED : டிச 22, 2024 01:16 AM

Google News

ADDED : டிச 22, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, டிச. 22-

குளித்தலை மின்வாரியம் சார்பில், மின் சிக்கன சேமிப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, மின்சார சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சரவணன் தலைமை வகித்தார். செயற்பொறியாளர் (பொது) கரூர் ரவிச்சந்திரன், குளித்தலை மற்றும் அய்யர்மலை உதவி கோட்ட பொறியாளர்கள் பாலகுமார், சிராஜுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணியை குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் சுங்ககேட் பகுதியில் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மக்களுக்கும், வணிகர்களுக்கும் வழங்கினர். பேரணியில், குளித்தலை உதவி பொறியாளர் நடராஜன், மின்வாரிய திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார்.

சுங்ககேட் ரவுண்டானாவில் இருந்து துவங்கிய பேரணி, திருச்சி - கரூர் நெடுஞ்சாலை வழியாக பஸ் ஸ்டாண்ட் வந்து, பின்னர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பணிக்கம்பட்டி உதவி பொறியாளர் ராம்குமார், குளித்தலை, அய்யர்மலை, பணிக்கம்பட்டி, சின்னப்பனையூர், காவல்காரன்பட்டி, தோகைமலை, சிந்தாமணிப்பட்டி, பஞ்சப்பட்டி உள்ளிட்ட 17 உட்பிரிவுகளுக்குட்பட்ட உதவி பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us