/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீரவள்ளி பகுதிகளில் நெல் அறுவடை பணி
/
வீரவள்ளி பகுதிகளில் நெல் அறுவடை பணி
ADDED : ஜன 23, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரவள்ளி பகுதிகளில் நெல் அறுவடை பணி
கிருஷ்ணராயபுரம்: வீரவள்ளி பகுதிகளில், விவசாயிகள் நெல் அறுவடை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த வீரவள்ளி, வீரகுமரான்பட்டி, சீகம்பட்டி, பிள்ளபாளையம், மங்கம்மாள் சாலை ஆகிய இடங்களில், விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இதற்கு தேவையான தண்ணீர், வாய்க்கால் பாசன முறையில் பாய்ச்சப்பட்டது. சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் நெல் விளைச்சல் கண்டுள்ளது. விளைந்த நெற்கதிர்களை, டிராக்டர் இயந்திரம் கொண்டு அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் ஓரளவு மகசூல் கிடைத்து வருகிறது.