ADDED : ஜன 31, 2025 01:18 AM
அ நிறம் | அளவு
தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு
குளித்தலை,: குளித்தலை அடுத்த கொசூர் பஞ்., கம்பளியாம்பட்டியை சேர்ந்தவர் ஜெய்சங்கர், 25; இவர் கடந்த, 2024 டிச., 20ல் தன் தோட்டத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது, நிலப்பிரச்னை முன்விரோதம் காரணமாக, இவரது அண்ணன் இளையராஜா, தகராறில் ஈடுபட்டு குச்சியால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ஜெய்சங்கர் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார், இளையராஜா மீது வழக்குப்
பதிந்து விசாரிக்கின்றனர்.
