sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தார்ச்சாலை இல்லாத அரசு பள்ளிமாணவ, மாணவியர் கடும் அவதி

/

தார்ச்சாலை இல்லாத அரசு பள்ளிமாணவ, மாணவியர் கடும் அவதி

தார்ச்சாலை இல்லாத அரசு பள்ளிமாணவ, மாணவியர் கடும் அவதி

தார்ச்சாலை இல்லாத அரசு பள்ளிமாணவ, மாணவியர் கடும் அவதி


ADDED : பிப் 19, 2025 01:46 AM

Google News

ADDED : பிப் 19, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தார்ச்சாலை இல்லாத அரசு பள்ளிமாணவ, மாணவியர் கடும் அவதி

கரூர்:கரூர் அருகே, அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் தார்ச்சாலை இல்லாததால், மாணவ, மாணவியர்

அவதிப்படுகின்றனர்.கரூர் மாவட்டம், நெரூர் தென்பாகம் பஞ்சாயத்து, அரங்கநாதன் பேட்டையில், அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளிக்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக, மண் சாலையாக உள்ளது. இதனால், மழை காலங்களில் மாணவ, மாணவியர், சேறு, சகதியில் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. மேலும், பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை. இதனால், விவசாய நிலங்களில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் எளிதாக பள்ளி வளாகத்தில் உலா வருவதால், மாணவ, மாணவியர் அச்சத்தில் உள்ளனர்.இது குறித்து, மாணவர்களின் பெற்றோர் பலமுறை கோரிக்கை வைத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே, அரங்கநாதன் பேட்டையில் செயல்பட்டு வரும், அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தார்ச்சாலை வசதி மற்றும் சுற்றுச்சுவர் வசதியை ஏற்படுத்தி தர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us