sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வெறி நாய்கள் கடிக்கு இரையாகும்ஆடுகளால் விவசாயிகள் கவலை

/

வெறி நாய்கள் கடிக்கு இரையாகும்ஆடுகளால் விவசாயிகள் கவலை

வெறி நாய்கள் கடிக்கு இரையாகும்ஆடுகளால் விவசாயிகள் கவலை

வெறி நாய்கள் கடிக்கு இரையாகும்ஆடுகளால் விவசாயிகள் கவலை


ADDED : பிப் 23, 2025 01:36 AM

Google News

ADDED : பிப் 23, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெறி நாய்கள் கடிக்கு இரையாகும்ஆடுகளால் விவசாயிகள் கவலை

கரூர்:க.பரமத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், ஆடுகளை வெறி நாய்கள் கடிப்பது தொடர்கிறது. இதனால், ஆடு வளர்ப்பு விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம், க.பரமத்தி, தென்னிலை உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், ஆடு வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. பிரத்யேகமாக அமைக்கப்படும் பட்டிகளில், ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், கிராமப்புறங்களில் நாய்கள், அடிக்கடி பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து கொன்று வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும், 300க்கும் மேற்பட்ட ஆடுகள், வெறிநாய்களின் கடிக்கு பலியாகியுள்ளன.இதுகுறித்து, ஆடு வளர்ப்பு விவசாயிகள் கூறியதாவது: க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன் பகுதி

யில், ஆடு வளர்ப்பு மூலம் தான், விவசாயிகள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனால் வெறி நாய்களால், ஆடுகளுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. மேலும் ஆடுகள் இறப்பால், பொருளாதார நெருக்கடி உண்டாகிறது. வங்கி கடன்களை, திருப்பி செலுத்தாத நிலை உள்ளது. எனவே, க.பரமத்தி பகுதிகளில் சுற்றித்திரியும் வெறி நாய்களை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us