தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ இன்று ஆத்துார் மஹா சோளியம்மன்முத்துசாமி கோவில் கும்பாபிஷேகம்

இன்று ஆத்துார் மஹா சோளியம்மன்முத்துசாமி கோவில் கும்பாபிஷேகம்

இன்று ஆத்துார் மஹா சோளியம்மன்முத்துசாமி கோவில் கும்பாபிஷேகம்


ADDED : மார் 10, 2025 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2025 01:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்று ஆத்துார் மஹா சோளியம்மன்முத்துசாமி கோவில் கும்பாபிஷேகம்

கரூர்:கரூர் மாவட்டம், ஆத்துார் வீரசோளிபாளையத்தில், மஹா சோளியம்மன், மஹா முத்துசாமி கோவில், கருங்கற்களால் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கடந்த, 4 இரவு கிராம சாந்தியுடன், கும்பாபிஷேக விழா தொடங்கியது. கடந்த, 5ல் வாஸ்து பூஜை, 6ல் பூர்ணாகுதி நடந்த பின், தீபாராதனை காட்டப்பட்டது. மார்ச், 7 காலை, 8:00 மணிக்கு ஆச்சார்ய அஸ்திராபிஷேகம், தசவித ஸ்நானம் நடந்தது. தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் இருந்து புனித தீர்த்தம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

நேற்று காலை, 8:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், மாலை, 6:00 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. இரவு, 10:30 மணிக்கு மருந்து சாற்றுதல் நிகழ்வு நடந்தது. மாலை, 5:00 மணிக்கு திருப்பூர் விஸ்வநாதன் தலைமையில் பவளக்கொடி கும்மியாட்டம், இரவு, 7:30 மணிக்கு ட்ரோன் ஷோ வான் வழி கண்காட்சி நடந்தது.

இன்று அதிகாலை 3:30 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை, 5:30 மணிக்கு மேல், 6:45 மணிக்குள் விநாயகர், மஹா சோளியம்மன், மஹா முத்துசாமி மற்றும் அனைத்து பரிவார மூலமூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us