sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கொளுத்தும் கோடை வெயில்மண் பானை விற்பனை ஜோர்

/

கொளுத்தும் கோடை வெயில்மண் பானை விற்பனை ஜோர்

கொளுத்தும் கோடை வெயில்மண் பானை விற்பனை ஜோர்

கொளுத்தும் கோடை வெயில்மண் பானை விற்பனை ஜோர்


ADDED : மார் 10, 2025 01:22 AM

Google News

ADDED : மார் 10, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்தமிழகத்தில், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கோடை வெயில் தாக்கம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் கடந்த, ஐந்து நாட்களாக சராசரியாக, 98 டிகிரி பாரன்ஹீட் முதல், 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்து

வருகிறது. இதனால், பொதுமக்கள் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும், இளநீர், தர்ப்பூசணி, மோர், வெள்ளரிக்காய் உள்ளிட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு வருகின்றனர். மேலும், கோடைகாலத்தில் பானையில் வைக்கப்பட்ட நீரை பொது மக்கள் விரும்பி அருந்துவது வழக்கம்

இதையொட்டி, பிளாஸ்டிக் பைப்புகள் பொருத்திய பானை விற்பனை, கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட், ஜவஹர் பஜார் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சூடு

பிடித்துள்ளது.இதுகுறித்து, மண்பானை விற்பனையாளர்கள் கூறியதாவது: நடப்பாண்டு கோடையில், களிமண் பானை விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக, பிளாஸ்டிக் பைப் பொருத்தப்பட்ட மண் பானைகளுக்கு பொதுமக்களிடையே நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது. சாதாரண பானை, 200 ரூபாய் முதல், 250 ரூபாய் வரையிலும், பிளாஸ்டிக் பைப் பொருத்தப்பட்ட மண் பானை, 300 ரூபாய் முதல், 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us