தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கொளுத்தும் கோடை வெயில்மண் பானை விற்பனை ஜோர்

கொளுத்தும் கோடை வெயில்மண் பானை விற்பனை ஜோர்

கொளுத்தும் கோடை வெயில்மண் பானை விற்பனை ஜோர்


ADDED : மார் 10, 2025 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2025 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்தமிழகத்தில், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கோடை வெயில் தாக்கம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் கடந்த, ஐந்து நாட்களாக சராசரியாக, 98 டிகிரி பாரன்ஹீட் முதல், 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்து

வருகிறது. இதனால், பொதுமக்கள் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும், இளநீர், தர்ப்பூசணி, மோர், வெள்ளரிக்காய் உள்ளிட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு வருகின்றனர். மேலும், கோடைகாலத்தில் பானையில் வைக்கப்பட்ட நீரை பொது மக்கள் விரும்பி அருந்துவது வழக்கம்

இதையொட்டி, பிளாஸ்டிக் பைப்புகள் பொருத்திய பானை விற்பனை, கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட், ஜவஹர் பஜார் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சூடு

பிடித்துள்ளது.இதுகுறித்து, மண்பானை விற்பனையாளர்கள் கூறியதாவது: நடப்பாண்டு கோடையில், களிமண் பானை விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக, பிளாஸ்டிக் பைப் பொருத்தப்பட்ட மண் பானைகளுக்கு பொதுமக்களிடையே நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது. சாதாரண பானை, 200 ரூபாய் முதல், 250 ரூபாய் வரையிலும், பிளாஸ்டிக் பைப் பொருத்தப்பட்ட மண் பானை, 300 ரூபாய் முதல், 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us