/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக் மீது சரக்கு வாகனம் மோதிதி.மு.க., கிளை செயலாளர் பலி
/
பைக் மீது சரக்கு வாகனம் மோதிதி.மு.க., கிளை செயலாளர் பலி
பைக் மீது சரக்கு வாகனம் மோதிதி.மு.க., கிளை செயலாளர் பலி
பைக் மீது சரக்கு வாகனம் மோதிதி.மு.க., கிளை செயலாளர் பலி
ADDED : மார் 23, 2025 01:08 AM
பைக் மீது சரக்கு வாகனம் மோதிதி.மு.க., கிளை செயலாளர் பலி
குளித்தலை:பைக் மீது சரக்கு வாகனம் மோதி, தி.மு.க., கிளை செயலாளர் இறந்தார்.
குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தி.மு.க., கிளை செயலாளர் முருகானந்தம், 55, விவசாயி.
இவர், தனக்கு சொந்தமான புல்லட் பைக்கில் கடந்த, 20 காலை 9:30 மணியளவில் மனைவி புவனேஸ்வரியுடன், 44, திருச்சி மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.
கோட்டைமேடு குமாரமங்கலம் ராணி மங்கம்மாள் நெடுஞ்சாலையில், கூடலுார் மயானம் அருகே பின்னால் வந்த டாடா ஏசி சரக்கு வாகனம், பைக் மீது மோதியது.
இதில் முருகானந்தத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது மனைவிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக முருகானந்தம் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர், நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி புவனேஸ்வரி கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் சரக்கு வாகன டிரைவர் எழுநுாற்றுமங்களம் குடித்தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன், 57, என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.