/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர்-சேலம் பழைய சாலையில் சிக்னல்விளக்குகள் பழுதால் விபத்து அபாயம்
/
கரூர்-சேலம் பழைய சாலையில் சிக்னல்விளக்குகள் பழுதால் விபத்து அபாயம்
கரூர்-சேலம் பழைய சாலையில் சிக்னல்விளக்குகள் பழுதால் விபத்து அபாயம்
கரூர்-சேலம் பழைய சாலையில் சிக்னல்விளக்குகள் பழுதால் விபத்து அபாயம்
ADDED : ஏப் 09, 2025 01:22 AM
கரூர்-சேலம் பழைய சாலையில் சிக்னல்விளக்குகள் பழுதால் விபத்து அபாயம்
கரூர்:கரூர் அருகே, போக்குவரத்து சிக்னல்கள் செயல்படாமல் உள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
கரூர்-சேலம் பழைய சாலையில், பல்வேறு இடங்களில் போக்குவரத்தை சீர் செய்யவும், விபத்துகளை தடுக்கவும், சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், பல இடங்களில் சிக்னல் விளக்குகள், சேதமடைந்து எரியாத நிலையில் உள்ளது. குறிப்பாக, வாங்கப்பாளையம் பிரிவு பகுதியில், பல மாதங்களாக சிக்னல் விளக்குகள் எரியாமல் சேதமடைந்துள்ளது. இதனால், கரூர்-சேலம் பழைய சாலையில் இருந்து, நாமக்கல், சேலம் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அடிக்கடி போக்குவரத்தில் சிக்கி கொள்கிறது. மேலும், கரூர் நகரில் இருந்து வாங்கப்பாளையம் வழியாக, பல பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும், விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால், சிறு சிறு விபத்துகள் ஏற்படு கிறது.
எனவே, கரூர்-சேலம் பழைய சாலை வாங்கப்பாளையம் பிரிவில், செயல்படாமல் சேதமடைந்துள்ள, சிக்னல் விளக்குகளை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.