sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் நகை திருடிய பெண் கைது

/

ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் நகை திருடிய பெண் கைது

ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் நகை திருடிய பெண் கைது

ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் நகை திருடிய பெண் கைது


ADDED : ஏப் 15, 2025 02:05 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் நகை திருடிய பெண் கைது

கரூர்:வெள்ளியணை அருகே, ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் தங்க நகையை, திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை தாளியாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நகுல்சாமி, 71; ஓய்வு பெற்ற நீதிபதி. இவரது வீட்டில் அங்காயி என்ற, பெண் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 12ல் அங்காயியை பார்க்க அவரது உறவினர் ரஞ்சிதா, 30, என்பவர் ஓய்வு பெற்ற நீதிபதி நகுல்சாமியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

பிறகு, வீட்டில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டிருந்த, மூன்று பவுன் தங்க நகையை காணவில்லை. இதுகுறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி நகுல்சாமி போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், போலீசார் நடத்திய விசாரணையில், தங்க நகைகளை திருடியது ரஞ்சிதா என தெரியவந்தது. இதையடுத்து, ரஞ்சிதாவை வெள்ளியணை போலீசார் கைது செய்து, திருடிய தங்க நகைகளை மீட்டனர்.






      Dinamalar
      Follow us