/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அபயபிரதான ரங்கநாத சுவாமிகோவிலில் ராப்பத்து உற்சவம்
/
அபயபிரதான ரங்கநாத சுவாமிகோவிலில் ராப்பத்து உற்சவம்
அபயபிரதான ரங்கநாத சுவாமிகோவிலில் ராப்பத்து உற்சவம்
அபயபிரதான ரங்கநாத சுவாமிகோவிலில் ராப்பத்து உற்சவம்
ADDED : ஜன 19, 2025 01:51 AM
கரூர், :கரூர், அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், நேற்று ஒன்பதாம் நாள் ராப்பத்து உற்சவம் நடந்தது.
கரூரில், பிரசித்தி பெற்ற அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில் கடந்த, 31ல் வைகுண்ட ஏகாதசி திருவிழா, பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. கடந்த, 9ல் இரவு மூலவர் மோகினி அலங்காரம் மற்றும் நாச்சியார் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 10ல் சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது.
அதை தொடர்ந்து நாள்தோறும் ராப்பத்து உற்சவம் நடந்து வருகிறது. நேற்று, ஒன்பதாம் நாள் ராப்பத்து உற்சவம் நடந்தது. அதில், ஆண்டாள் திருக்கோலம் வேடத்தில், உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

