/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூர் வாய்க்காலை துார் வாரவிவசாயிகள் வேண்டுகோள்
/
புகழூர் வாய்க்காலை துார் வாரவிவசாயிகள் வேண்டுகோள்
ADDED : ஜன 23, 2025 01:22 AM
புகழூர் வாய்க்காலை துார் வாரவிவசாயிகள் வேண்டுகோள்
கரூர், :புதர்மண்டி கிடக்கும், புகழூர் வாய்க்காலை துார்வார வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் தடுப்பணையில் இருந்து பிரியும் புகழூர் வாய்க்கால், நொய்யல், வேட்டமங்கலம், நாணப்பரப்பு, வேலாயுதம்பாளையம், புஞ்சைத்தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், வாங்கல், நெரூர்வடபாகம் வழியாக சென்று காவிரியில் கலக்கிறது. இந்த வாய்க்கால் மூலம், 35 ஆயிரம் ஏக்கரில் நெல், வாழை, வெற்றிலை, கோரை, மரவள்ளிக்கிழங்கு, தென்னை உள்ளிட்ட சாகுபடி நடக்கிறது. கரூர் மாவட்டத்தின் முக்கிய வாய்க்கால்களின் ஒன்றாக இருக்கும் இதில், ஆங்காங்கே முட்புதர்கள் மண்டி கிடக்கின்றன. இதனால் வாய்க்காலில் நீரோட்டம் தடைப்படுவதால், விளை நிலங்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதியுறுகின்றனர்.
எனவே வாய்க்காலில் உள்ள முட்புதர்கள், ஆகாயத்தாமரைகள் ஆகியவற்றை அகற்றி துார் வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

