/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் பிரசார கூட்டம்
/
உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் பிரசார கூட்டம்
உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் பிரசார கூட்டம்
உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் பிரசார கூட்டம்
ADDED : பிப் 01, 2025 12:53 AM
உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் பிரசார கூட்டம்
கரூர்:கரூர் மாவட்ட உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில், ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமையில் பிரசார கூட்டம் நடந்தது.
அதில், உழைக்கும் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு, இ.எஸ்.ஐ., வசதி வழங்க வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இருப்பிடத்தை உறுதி செய்ய வேண்டும் தொழிலாளர் நல வாரிய இணையதளத்தை சரி செய்ய வேண்டும்.
துாய்மை பணியாளர்களுக்கு சமூக அந்தஸ்து மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட சி.ஐ.டி.யு., செயலாளர் முருகேசன், எல்.எல்.எப்., மாவட்ட செயலாளர் சுடர் வளவன் உள்பட, பலர்
பங்கேற்றனர்.