/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவீரர்களுக்கு மலர் துாவி மரியாதை
/
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவீரர்களுக்கு மலர் துாவி மரியாதை
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவீரர்களுக்கு மலர் துாவி மரியாதை
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவீரர்களுக்கு மலர் துாவி மரியாதை
ADDED : பிப் 15, 2025 01:59 AM
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவீரர்களுக்கு மலர் துாவி மரியாதை
அரவக்குறிச்சி:புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த, எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு, அரவக்குறிச்சி ஒன்றிய ஹிந்து முன்னணி சார்பில் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலையின் புல்வாமா பகுதியில், 2019-ம் ஆண்டு பிப்., 14ம்ந் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனம் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில், 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் உயிரிழந்தனர்.
தாக்குதலின் ஆறா-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. கரூர் மாவட்ட ஹிந்து முன்னணி செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

