/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவலாளி அடித்து கொலைவட மாநில வாலிபர் கைது
/
காவலாளி அடித்து கொலைவட மாநில வாலிபர் கைது
ADDED : மார் 04, 2025 01:29 AM
காவலாளி அடித்து கொலைவட மாநில வாலிபர் கைது
கரூர்:கரூர் அருகே, காவலாளியை அடித்து கொன்ற, வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன், 71; இவர், ஈரோடு சாலை, சரவணா நகரில் உள்ள சிமென்ட் கல் தயாரிக்கும் நிறுவனத்தில், காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும், அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த, அசாம் மாநிலம் பீகுபார் பகுதியை சேர்ந்த கவுதம் என்பவரது மகன் சாகர் குமார், 20; என்பவருக்கும், நேற்று அதிகாலை தகராறு ஏற்பட்டது.
அப்போது, குடிபோதையில் இருந்த சாகர் குமார், இரும்பு சுத்தியால் பழனியப்பனை அடித்து கொலை செய்தார். இதுகுறித்து, தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார், சாகர் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.