sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் வடிவேல் நகரில் வடிகால்கால்வாய் அமைக்க கோரிக்கை

/

கரூர் வடிவேல் நகரில் வடிகால்கால்வாய் அமைக்க கோரிக்கை

கரூர் வடிவேல் நகரில் வடிகால்கால்வாய் அமைக்க கோரிக்கை

கரூர் வடிவேல் நகரில் வடிகால்கால்வாய் அமைக்க கோரிக்கை


ADDED : மார் 07, 2025 01:58 AM

Google News

ADDED : மார் 07, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் வடிவேல் நகரில் வடிகால்கால்வாய் அமைக்க கோரிக்கை

கரூர்,:கரூர், வடிவேல் நகரில் முறையாக வடிகால் கால்வாய் வசதி செய்து தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர், ஈரோடு சாலையில் வடிவேல் நகரில் ஏராளமான வணிக நிறுவனங்கள், திருமண மண்டபம், வீடுகள் உள்ளன. இப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஈரோடு சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய் வழியாக செல்கிறது. இங்கு, வடிகால் கால்வாய் தொடர்ந்து

இல்லாததால், கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கரூர் வடிவேல் நகர் சுற்று வட்டார பகுதியில் உள்ள மழைநீர், கழிவு நீர், ஈரோடு சாலையில் உள்ள வடிகால் கால்வாய் வழியாக வெளியேறி வருகிறது. இங்கு, தொடர்ச்சியாக கால்வாய் கட்டப்படாமல் உள்ளது. சாலையில் மற்றொரு புறம் கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்த போது, மழைநீர் வடிகால் கால்வாய், மாநில நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ளது என்கின்றனர். மாநில நெடுஞ்சாலை அலுவலகத்தில், பல முறை மனு அளித்தும், விடுபட்ட இடங்களில் கால்வாய் கட்டப்படாமல் உள்ளது. மழை பெய்யும் போதும், வீடுகளில் கழிவுநீர் புகுந்து விடுகிறது. பெரும்பாலான நாட்களில் துர்நாற்றம் வீசுகிறது. முறையாக மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us