/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வடிகால் தடுப்பு சுவர் இல்லாததால்விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
வடிகால் தடுப்பு சுவர் இல்லாததால்விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
வடிகால் தடுப்பு சுவர் இல்லாததால்விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
வடிகால் தடுப்பு சுவர் இல்லாததால்விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : மார் 21, 2025 01:57 AM
வடிகால் தடுப்பு சுவர் இல்லாததால்விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
கரூர்:கரூர், காந்திகிராமம் பகுதியில் உள்ள வடிகாலில், தடுப்பு சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
கரூரில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடவூர், குளித்தலை உள்பட பல்வேறு ஊர்களுக்கு காந்திகிராமம் வழியாக வாகனங்கள் செல்கின்றன. தெரசா கார்னர் பகுதியில் இருந்து, ரயில்வே மேம்பாலம் வரை, காந்திகிராமம் பகுதியின் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. சாலையின் இருபுறமும், சாலையோர சாக்கடை வடிகால் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஆனால், சாலையோர வடிகால்கள் பல்வேறு பகுதிகளில் திறந்து கிடக்கிறது.
இரவு நேரங்களில் வரும் வாகனங்கள், வழிவிட ஒதுங்கும் போது, தடுமாறி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர், விழுந்து உயிரிழப்பு கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, உடனடியாக சாலையோரம் வடிகால் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்
பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.