sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் தி.மு.க., அரசை கண்டித்துபா.ஜ., கருப்பு கொடி போராட்டம்

/

கரூரில் தி.மு.க., அரசை கண்டித்துபா.ஜ., கருப்பு கொடி போராட்டம்

கரூரில் தி.மு.க., அரசை கண்டித்துபா.ஜ., கருப்பு கொடி போராட்டம்

கரூரில் தி.மு.க., அரசை கண்டித்துபா.ஜ., கருப்பு கொடி போராட்டம்


ADDED : மார் 23, 2025 12:59 AM

Google News

ADDED : மார் 23, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூரில் தி.மு.க., அரசை கண்டித்துபா.ஜ., கருப்பு கொடி போராட்டம்

கரூர்:தி.மு.க., அரசை கண்டித்து, கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என, பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன்படி, தி.மு.க., அரசை கண்டித்து கரூரில், ஈரோடு சாலை வீனஸ் நகரில் உள்ள தனது வீட்டின் முன், பா.ஜ., கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடந்தது.

பின், அவர் கூறியதாவது:கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து தென்காசி, கோவை என எல்லையோர மாவட்டங்களில், மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். முல்லை பெரியாறு அணை பிரச்னை தீர்க்கப்படவில்லை. கர்நாடகாவை பொறுத்தவரை, நீண்டகாலமாக இருக்கும் காவிரி பிரச்னையில், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கூறி வருகிறது. ஆனால், கேரள முதல்வர் விஜயன், கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் ஆகியோரிடம், இப்பிரச்னைகள் குறித்து பேசவில்லை. அதற்குமாறாக, சென்னைக்கு அழைத்து பிரச்னையே இல்லாத தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை என்ற நாடகத்தை நடத்தி கொண்டு இருக்கின்றனர்.

இவ்வாறு கூறினார்.நிர்வாகிகள், அவர்களது வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.






      Dinamalar
      Follow us