/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையில் திரியும் கால்நடைகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
சாலையில் திரியும் கால்நடைகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையில் திரியும் கால்நடைகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையில் திரியும் கால்நடைகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஏப் 01, 2025 01:25 AM
சாலையில் திரியும் கால்நடைகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
கரூர்:சாலையில் கால் நடைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
கரூர் மாநகராட்சி பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை-களை வளர்த்து வருபவர்களில் சிலர், அவற்றை தங்களது வீடு-களில் கட்டி வளர்க்காமல், சாலையில் திரிய விடுகின்றனர். கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. பெரும்பாலான நேரங்களில், ஒரே இடத்தில் கால்நடைகள் நின்று விடுவதால், மக்கள் சாலையை கடப்பதற்கும் சிரமப்படும் நிலை ஏற்படுகிறது. ஆடுகள் திடீரென வாகனங்களின் குறுக்கே பாய்வதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். சில நேரங்களில், வாகனங்கள் சென்று வரும்போது கால்நடைகளை உரசி செல்வதால், காயம் அடைவதுடன், இருசக்கர வாகனங்களில் வந்து செல்வோர் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
சாலைகளில் திரியும் ஆடுகள், இப்பகுதியில் பூ, பழம், காய்கறி கடைகளுக்கு சென்று அவற்றை தின்பதால் வியாபாரிகளும் தொந்தரவுக்கு உள்-ளாகின்றனர். மாடுகள் சுவரொட்டிகளை கூட விட்டு வைப்பதில்லை. கால்நடைகளை சாலையில் அலைய விடும், உரிமையா-ளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்-டிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.