sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாக்கடை கழிவுடன் பிளாஸ்டிக் குப்பையும்அமராவதி ஆற்றில் கலப்பதால் துர்நாற்றம்

/

சாக்கடை கழிவுடன் பிளாஸ்டிக் குப்பையும்அமராவதி ஆற்றில் கலப்பதால் துர்நாற்றம்

சாக்கடை கழிவுடன் பிளாஸ்டிக் குப்பையும்அமராவதி ஆற்றில் கலப்பதால் துர்நாற்றம்

சாக்கடை கழிவுடன் பிளாஸ்டிக் குப்பையும்அமராவதி ஆற்றில் கலப்பதால் துர்நாற்றம்


ADDED : ஏப் 06, 2025 01:27 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாக்கடை கழிவுடன் பிளாஸ்டிக் குப்பையும்அமராவதி ஆற்றில் கலப்பதால் துர்நாற்றம்

கரூர்:அமராவதி ஆற்றில், பிளாஸ்டிக் குப்பை கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, கரூர் மாவட்டத்துக்கு விவசாய பணிகள் மற்றும் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. அமராவதி அணையில் இருந்து செல்லும், 17 கிளை வாய்க்கால்கள் மூலம், ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதியை பெறுகிறது.

மேலும், அரவக்குறிச்சி, க.பரமத்தி மற்றும் தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் உள்ள, 70 க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளின் குடிநீர் ஆதாரமாகவும் அமராவதி ஆறு உள்ளது.

தற்போது, கரூர் மாவட்டத்தில், சம்பா சாகுபடி நிறைவு பெற்றுள்ள நிலையில், அமராவதி அணையில் இருந்து ஆற்றில், திறக்கபட்ட தண்ணீர் கடந்த, ஒரு மாத காலமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றுப்பகுதிகளையொட்டிய, கரூர் மாநகராட்சி பகுதிகளில் இருந்து, பிளாஸ்டிக் குப்பை கழிவு அமராவதி ஆற்றில் அதிகளவில் கலக்கிறது.

இதனால், அமராவதி ஆறு தற்போது, பிளாஸ்டிக் குப்பையாக காணப்படுகிறது. அந்த பிளாஸ்டிக் குப்பை, திருமுக்கூடலுார்

பகுதியில், காவிரியாற்றில் கலந்து மாயனுார் கதவணைக்கும் செல்கிறது. இதனால், விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், குடிநீரும் மாசுபடுகிறது.

எனவே, அமராவதி ஆற்றில் பிளாஸ்டிக் குப்பை கலப்பதை தடுக்கும் வகையில், கரூர் மாவட்ட மாசு கட்டுபாடு வாரியம் மற்றும் கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து கரூர் பாசன விவசாயிகள் கூறுகையில், ''கரூர் பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுடன், பிளாஸ்டிக் குப்பையும் கலந்து வந்து, அமராவதி ஆற்றில் கலக்கிறது. இதனால் அமராவதி ஆறு மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும், விவசாய நிலங்களில் பிளாஸ்டிக் கழிவு தேங்குவதால், மண்ணின் தன்மை மாறி விவசாயம் பாதிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சாக்கடை கழிவு அமராவதி ஆற்றில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.






      Dinamalar
      Follow us