sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மழையால் மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து திடீர் அதிகரிப்பு

/

மழையால் மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து திடீர் அதிகரிப்பு

மழையால் மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து திடீர் அதிகரிப்பு

மழையால் மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து திடீர் அதிகரிப்பு


ADDED : ஏப் 08, 2025 01:41 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மழையால் மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து திடீர் அதிகரிப்பு

கரூர்:மழை காரணமாக, மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து நேற்று அதிகரித்தது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியாற்றில் வினாடிக்கு, 1,000 கன அடி தண்ணீர் மட்டும் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் காவிரியாற்று பகுதிகளில் மழை பெய்தது.

இதனால், மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாயனுார் கதவணைக்கு வினாடிக்கு, 866 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மழை காரணமாக தண்ணீர் வரத்து வினாடிக்கு, 1,095 கன அடியாக அதிகரித்தது.

அந்த தண்ணீர் முழுவதும் குடிநீர் தேவைக்காக, காவிரியாற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

* திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 156 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி அணையில் இருந்து, ஆறு மற்றும் புதிய பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 48.56 அடியாக இருந்தது. அணைப்பகுதியில், 6 மி.மீ., மழை பெய்தது.

* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து நின்றது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 9.41 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அணை நீர்ப்பிடிப்பு பகுதியில், 4 மி.மீ., மழை

பெய்தது.






      Dinamalar
      Follow us