/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா:அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சி
/
பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா:அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சி
பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா:அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சி
பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா:அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சி
ADDED : ஏப் 09, 2025 01:23 AM
பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா:அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சி
கரூர்:கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரதிருவிழாவையொட்டி, நேற்று சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.
பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த, 3ல் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்கியது. அதை தொடர்ந்து, பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடந்து வருகிறது. நேற்று காலை சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு அபி ேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். இன்று காலை, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும், 11ல் தேரோட்டம், 12ல் தீர்த்தவாரி, 13ல் ஆளும் பல்லாக்கு, 14ல் ஊஞ்சல் உற்சவம், 15ல் வெள்ளி வாகனத்தில் உற்சவர் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.