/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் குண்டும், குழியுமான சாலைவாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
/
கரூரில் குண்டும், குழியுமான சாலைவாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
கரூரில் குண்டும், குழியுமான சாலைவாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
கரூரில் குண்டும், குழியுமான சாலைவாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
ADDED : ஏப் 10, 2025 01:16 AM
கரூரில் குண்டும், குழியுமான சாலைவாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
கரூர்:கரூரில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.கரூர் மாநகராட்சி, மேற்கு பங்களா தெரு வழியாக, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மாநகராட்சி அலுவலகம், கோவில், மருத்துவமனைகளுக்கு, பொதுமக்கள் டூவீலர், கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் ஏராளமான வீடுகள், தனியார் கல்லுாரி உள்ளது.
இந்நிலையில், கரூர் மேற்கு பங்களா சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுகின்றனர். இதனால், மேற்கு பங்களா தெருவில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.