/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை
/
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை
ADDED : அக் 04, 2024 01:16 AM
லாலாப்பேட்டை மண்டியில்
வாழைத்தார்கள் விற்பனை
கிருஷ்ணராயபுரம், அக். 4-
லாலாப்பேட்டை கமிஷன் மண்டியில், வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை, பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, வல்லம், வீரகுமரான் பட்டி, வீரவள்ளி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி ஆகிய இடங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி ஆகிய ரக வாழைத்தார்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள், லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்று பூவன் தார், 300 ரூபாய், ரஸ்தாளி, 350 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

