/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெடுஞ்சாலை துறை சங்கம் ஆர்ப்பாட்டம்
/
நெடுஞ்சாலை துறை சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 11, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் செவிந்திலிங்கம் தலைமையில், செல்லாண்டிப்பாளையம் கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், கிராமப்புற இளைஞர்
களுக்கு காலி பணியிடங்களில், வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, இணைச்செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.