/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உடைந்த நிலையில் தொட்டிபொதுமக்கள் அதிருப்தி
/
உடைந்த நிலையில் தொட்டிபொதுமக்கள் அதிருப்தி
ADDED : பிப் 05, 2025 01:28 AM
உடைந்த நிலையில் தொட்டிபொதுமக்கள் அதிருப்தி
கரூர் :கரூர் அருகே, சின்டெக்ஸ் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது.கரூர் பஞ்சாயத்து யூனியன், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி பஞ்., அரசு காலனி பகுதியில், 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன், இந்த பகுதியில் போர்வெல் அமைத்து, சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டது. அதில், அரசு காலனி பகுதியை சேர்ந்த, பொது மக்கள் தண்ணீர் பிடித்து வந்தனர்.இந்நிலையில், சின்டெக்ஸ் தொட்டி சேதமடைந்துள்ளது. மேலும், தொட்டியை சுற்றி, முட்புதர்கள் முளைத்துள்ளன. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். எனவே, அரசு காலனி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். சேதமடைந்த நிலையில் உள்ள, சின்டெக்ஸ் தொட்டியை மாற்ற, மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி கிராம பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.