ADDED : பிப் 18, 2025 12:59 AM
அ நிறம் | அளவு
மழைநீர் வழித்தடங்களில்துாய்மை பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம்:வயலுார் பஞ்சாயத்து வார்டுகளில், மழை நீர் செல்லும் வழித்தடங்களில் துாய்மை பணி
நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, வயலுார் பஞ்சாயத்து வார்டுகளுக்கு உட்பட்ட தேவசிங்கப்பட்டி, நடுப்பட்டி, சரவணபுரம், வயலுார் குளம் ஆகிய
பகுதிகளில் சாலையோர இடங்களில் மழைநீர் செல்லும் வழித்தடங்கள் உள்ளன. இந்த வழியாக, மழை நீர் சென்று வயலுார் மழைநீர் சேமிப்பு குளத்தில் கலக்கிறது. தற்போது மழை நீர் செல்லும் வழிகளில், அதிகமான செடிகள் வளர்ந்து வருவதால், மழைநீர் வரும் போது விவசாய நிலங்களில் புகுந்து விடுகிறது. இதை தடுக்கும் வகையில், முள் செடிகள் முழுவதும் நுாறு நாள் திட்ட
தொழிலாளர்கள் கொண்டு சரி செய்யப்பட்டது.
