ADDED : பிப் 20, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாகன விபத்தில் மூதாட்டி பலி
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே, 5 ரோடு பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தார்.
அரவக்குறிச்சி அருகே கொடையூர் கிராமம் ஐந்து ரோடு பகுதியை சேர்ந்தவர் மலர்கொடி, 67. இவரது கணவர் பிரிந்து சென்றதால் தனியே வசித்து வந்தார். இவர் நேற்று ஐந்து ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் மலர்கொடி படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.