தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அமராவதி அணையில்தண்ணீர் திறப்பு நிறுத்தம்

அமராவதி அணையில்தண்ணீர் திறப்பு நிறுத்தம்

அமராவதி அணையில்தண்ணீர் திறப்பு நிறுத்தம்


ADDED : பிப் 27, 2025 02:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2025 02:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அமராவதி அணையில்தண்ணீர் திறப்பு நிறுத்தம்

கரூர்:அமராவதி அணையில் இருந்து, தண்ணீர் திறப்பு நேற்று நிறுத்தப்பட்டது.திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, கரூர் மாவட்ட சம்பா சாகுபடி பணிக்காக, கடந்த மூன்று மாதங்களாக முறைவைத்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது, கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றின் விவசாய பகுதிகளான அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை மற்றும் கரூர் வட்டார பகுதிகளில், சம்பா சாகுபடி நெல் அறுவடை தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால், அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட, தண்ணீர் நேற்று காலை நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம், 57.75 அடியாக இருந்தது. அமராவதி அணைக்கு நேற்று காலை வினாடிக்கு, 37 கன அடி தண்ணீர் வந்தது.

* கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 97 கன அடியாக தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் காவிரியாற்றில் குடிநீர் தேவைக்காக, திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது

* கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து நின்றது. இதனால், நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 7 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 14.95 அடியாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us