ADDED : மார் 08, 2025 01:34 AM
அ நிறம் | அளவு
சிறுமிக்கு பாலியல் தொல்லைபோக்சோவில் முதியவர் கைது
கரூர்:கரூர் அருகே, பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, முதியவரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், ராயனுார் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் செல்வராஜ், 53; மின் மோட்டார் ஆப்ரேட்டர். இவர் கடந்த, 26 மாலை, 12 வயதுடைய, எட்டாம் வகுப்பு படித்து வரும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து, சிறுமியின் சகோதரர் கொடுத்த புகார்படி, கரூர் மகளிர் போலீசார் செல்வராஜை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்கின்றனர்.
