/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டெக்ஸ் தொழிலாளியிடம் ரூ.1,000 பறித்தவர் கைது
/
டெக்ஸ் தொழிலாளியிடம் ரூ.1,000 பறித்தவர் கைது
ADDED : செப் 02, 2024 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த பாலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தண்ட-பாணி, 32; டெக்ஸ் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, வேலை முடிந்து, சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்-டிருந்தார்.
மகிளிப்பட்டி இரட்டை வாய்க்கால் கரை அருகே சென்-றபோது, மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த சண்முகம், 48, என்-பவர் வழிமறித்து, அரிவாளை காட்டி தண்டபாணியிடம், 1,000 ரூபாயை பறித்துக்கொண்டு, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச்
சென்றார். இதுகுறித்து தண்டபாணி கொடுத்த புகார்படி, லாலாப்-பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.