/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேங்காம்பட்டியில் புதிதாக போர்வெல்
/
வேங்காம்பட்டியில் புதிதாக போர்வெல்
ADDED : மார் 02, 2025 06:57 AM
கரூர்: கரூர் மாவட்டம், கருப்பத்துார் பஞ்., வேங்காம்பட்டி பகுதியில் சரிவர, தண்ணீர் வரவில்லை என கூறி கடந்த, 27ல், அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள், சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பிரபா-கரன், பி.டி.ஓ., முருகேசன் ஆகியோர், சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் போர்வெல் அமைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேங்காம்பட்டியில், புதிதாக போர்வெல் அமைக்கப்பட்டது. மின் மோட்டார் வச-தியும், நான்கு கி.மீ., துாரம் பைப் லைன் அமைக்கும் பணிகளும் நடக்கிறது. இதையடுத்து, வேங்காம்பட்டி மக்கள் மகிழ்ச்சிய-டைந்தனர்.