ADDED : மார் 26, 2024 11:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: திருச்சி சரக போலீசில் இருந்து, முசிறி-2 போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன் ராஜ், கரூர் மாவட்ட தனிப்பிரிவுக்கும், மணப்பாறை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும் கடந்த, 15ல் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் கடந்த, 20ல் கரூர் மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று கொண்டார்.
அவரை தொடர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, நேற்று காலை கரூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு, மகளிர் போலீசார் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

