/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாலாப்பேட்டையில் வாழைத்தார்கள் விற்பனை
/
லாலாப்பேட்டையில் வாழைத்தார்கள் விற்பனை
ADDED : ஜூன் 28, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்,
லாலாப்பேட்டை கமிஷன் மண்டியில், வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, வல்லம், வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, மகிளிப்பட்டி, நந்தன்கோட்டை, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய பகுதியில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.
வாழைத்தார்கள் அறுவடை செய்து லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்று பூவன் தார், 250 ரூபாய், ரஸ்தாளி, 300 ரூபாய், கற்பூரவள்ளி, 150 ரூபாய்க்கு விற்கப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாழைத்தார்களை வாங்கி சென்றனர்.