/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
/
சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
ADDED : ஜன 24, 2025 01:13 AM
சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
கரூர், :கரூர் கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில், 3,000 ரூபாய் தொகுப்பூதியத்தில், நியமனம் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி, சிறப்பு காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவதை போல, அகவிலைப்படியுடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியம், 6,750 ரூபாய், குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும். பெண் சத்துணவு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு, 12 மாதம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், மாவட்ட செயலாளர் சுந்தரம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர் மகாவிஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

