ADDED : பிப் 05, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு பள்ளி ஆண்டு விழா
திருச்செங்கோடு :திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் பாலாஜி, தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு, சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக்குழு பொறுப்பாளர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.