/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நீதிமன்ற வளாகத்தில் கையெழுத்து இயக்கம்
/
நீதிமன்ற வளாகத்தில் கையெழுத்து இயக்கம்
ADDED : பிப் 08, 2025 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீதிமன்ற வளாகத்தில் கையெழுத்து இயக்கம்
கரூர்: கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி, கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது.
அதில், மாவட்ட தலைமை நீதிபதி சண்முக சுந்தரம், கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது, மாவட்ட
சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அனுராதா, நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உடனிருந்தனர்.