sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலை அகலப்படுத்தும் பணியில் பணியாளர்கள்

/

சாலை அகலப்படுத்தும் பணியில் பணியாளர்கள்

சாலை அகலப்படுத்தும் பணியில் பணியாளர்கள்

சாலை அகலப்படுத்தும் பணியில் பணியாளர்கள்


ADDED : பிப் 20, 2025 02:03 AM

Google News

ADDED : பிப் 20, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலை அகலப்படுத்தும் பணியில் பணியாளர்கள்

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி, நெடுஞ்சாலை துறை சார்பில் தாடிக்கொம்பு பகுதியில் இருந்து, பள்ளப்பட்டி வழியாக அரவக்குறிச்சி வரை, சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

பெருகிவரும் வாகன போக்குவரத்து காரணமாக, சாலை அகலப்படுத்துதல் பணி இன்றியமையாததாகி விட்டது. இந்நிலையில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டம் 2024-25ம் ஆண்டு நிதி திட்டத்தின் கீழ், கரூர் கோட்டம், அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள் அகலப்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் பணி நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தாடிக்கொம்பு பகுதியில் இருந்து பள்ளப்பட்டி வழியாக, அரவக்குறிச்சி வரை சாலை அகலப்படுத்தும் பணி விரைவாக நடந்து வருகிறது. அரவக்குறிச்சி அருகே உள்ள கரடிப்பட்டி பகுதியில், நேற்று நடந்த சாலை அகலப்படுத்தும் பணியை அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி ஆய்வு செய்தார். நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் வினோத் குமார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us