ADDED : பிப் 22, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகள் மாயம்; தாய் புகார்
குளித்தலை: குளித்தலை அடுத்த, கடவூர் பஞ்., கழுத்தரிக்கம்பட்டியை சேர்ந்தவர் மகாலட்சுமி, 42, விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் புனிதா, 19, நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டில் துாங்கினார். அதிகாலை 5:30 மணிக்கு பார்த்தபோது துாங்கிய மகளை காணவில்லை.
பல இடங்களை தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளைக் காணவில்லை என தாய் கொடுத்த புகாரின் படி, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.