ADDED : மார் 02, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சந்தையூரில்ஆடு, கோழிகள் விற்பனை
கிருஷ்ணராயபுரம்:சந்தையூர் வாரச் சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, இரும்பூதிப்பட்டி சந்தையூர் வாரச்சந்தை நேற்று கூடியது. ஆடு, கோழிகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. 7 கிலோ எடை கொண்ட ஆடு, 6,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நாட்டுகோழி கிலோ, 500 ரூபாய்க்கு விற்பனையானது. ஆடு, கோழிகள் வாங்க குளித்தலை, தோகைமலை, கழுகூர், தேசியமங்களம், பஞ்சப்பட்டி, லாலாப்பேட்டை, சேங்கல் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்தனர். கிராமங்களில் மாரியம்மன் கோவில் விழா துவக்கம் காரணமாக ஆடு, கோழிகள் விற்பனை ஜோராக நடந்தது.