ADDED : மார் 06, 2025 01:50 AM
அ நிறம் | அளவு
சுத்திகரிப்பு நிலையம்கருத்து கேட்பு கூட்டம்
கரூர்:புகழூர் நகராட்சி செம்பாடம்பாளையத்தில், சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பான, கருத்து கேட்பு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. புகழூர் நகராட்சி, 16வது வார்டு செம்பாடம்பாளையத்தில், சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக, நகராட்சி தலைவர் குணசேகரன் பொது மக்களிடம் விளக்கம் அளித்து பேசினார். அதை தொடர்ந்து, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கருத்துகளை தெரிவித்தனர். நகராட்சி பொறியாளர் மலர்க்கொடி, கவுன்சிலர் செல்வகுமரன் உள்பட, பலர் பங்கேற்றனர்.
