sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

செம்மறி ஆடு பராமரிப்பு முறைவிவசாயிகளுக்கு ஆலோசனை

/

செம்மறி ஆடு பராமரிப்பு முறைவிவசாயிகளுக்கு ஆலோசனை

செம்மறி ஆடு பராமரிப்பு முறைவிவசாயிகளுக்கு ஆலோசனை

செம்மறி ஆடு பராமரிப்பு முறைவிவசாயிகளுக்கு ஆலோசனை


ADDED : ஏப் 01, 2025 01:25 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்மறி ஆடு பராமரிப்பு முறைவிவசாயிகளுக்கு ஆலோசனை

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி பகுதியில், ஏராளமான விவசாயிகள் ஆடு வளர்த்து வருகின்றனர். செம்மறி ஆடுகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. இதனால், உயிரிழப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. செம்மறி பட்டி சரியாக அமைக்காவிட்டால் சளி, இருமல், புழு புண், குட்டிகளில் வளர்ச்சி குன்றுதல் காரணமாக ஆடுகள் இறந்து போக வாய்ப்பு உள்ளது. இவற்றை தடுக்க ஆடுகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, பட்டி தரம்புகள் விசாலமாக அமைக்க வேண்டும்.

குறைந்தபட்சம் ஒரு ஆட்டுக்கு, 4 சதுர அடி இடைவெளி விட வேண்டும். பட்டிக்கு மூன்றில் ஒரு பங்கு அளவு மட்டும் சாக்கு படுதா போடுதல் போதுமானது. காலையில் பட்டிக்குள் இளம் வெயில் விழும்படி, கிழக்கு பகுதியில் வெற்றிடம் விட வேண்டும். தென்னந்தோப்பு, மாந்தோப்பு போன்ற ஈரப்பதமான இடங்களில் பட்டி அமைக்கக்கூடாது. மேடான இடத்தில் பட்டி அமைக்க வேண்டும். தினமும் பட்டியை சுத்தப்படுத்துதல் வேண்டும்.

பட்டி தரம்புகளின் சுற்றுப்பகுதி, பெரிய ஆடுகளின் மீது கால்நடை மருத்துவரின் ஆலோசனை பெற்று, கைத்தெளிப்பான் மூலம் மருந்து தெளிப்பது நல்லது. இதனால் வாய்புண் நோயை பரப்பும் பூச்சிக்கடி மற்றும் புற உண்ணிகளை தவிர்க்கலாம். மாலையில் வேம்பு, யூகலிபட்ஸ், தும்பை மற்றும் இலை சருகுகள் கொண்டு பட்டிக்கு புகை போடலாம். இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, ஆடுகளை பனிக்கால நோய்களிலிருந்து பாதுகாத்து நஷ்டத்தை தவிர்த்து கொள்ளலாம் என, கால்நடை பராமரிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us