sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆரம்ப சுகாதார நிலையத்துக்குஆம்புலன்ஸ் செல்வதில் சிரமம்

/

ஆரம்ப சுகாதார நிலையத்துக்குஆம்புலன்ஸ் செல்வதில் சிரமம்

ஆரம்ப சுகாதார நிலையத்துக்குஆம்புலன்ஸ் செல்வதில் சிரமம்

ஆரம்ப சுகாதார நிலையத்துக்குஆம்புலன்ஸ் செல்வதில் சிரமம்


ADDED : ஏப் 03, 2025 01:40 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரம்ப சுகாதார நிலையத்துக்குஆம்புலன்ஸ் செல்வதில் சிரமம்

அரவக்குறிச்சி:மலைக்கோவிலுார், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் சாலையை, மேம்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அரவக்குறிச்சி அருகே, நாகம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மலைக்கோவிலுாரில், மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் உள்ளது. நாள்தோறும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு சிகிச்சைகளுக்காக, மலைக்கோவிலுார் சுகாதார நிலையம் வருகின்றனர். மேலும், கரூர் - -மதுரை தேசிய நெடுஞ்சாலையையொட்டி, மலைக்கோவிலுார் சுகாதார நிலையம் உள்ளது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்தில், சிறுசிறு காயங்கள்

ஏற்படுவோர், மலைக்கோவிலுார் சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக வருகின்றனர்.ஆனால், குடியிருப்பு பகுதிகளை தாண்டி, சுகாதார நிலையம் செல்ல வேண்டிய நிலை உள்ளதால், குறுகிய சாலைகளில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக செல்ல முடியவில்லை. இதனால், மதுரை தேசிய நெடுஞ்சாலை, அணுகு சாலை பகுதியில் இருந்து, மலைக்கோவிலுார் சுகாதார நிலையம் வரை, தரமான முறையில் தார்ச்சாலை அமைத்து, சாலையை விரிவுப்படுத்த வேண்டியது

அவசியம்.






      Dinamalar
      Follow us