தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சிமென்ட் கலவை போட்டும்தார் சாலை அமைக்கவில்லை

சிமென்ட் கலவை போட்டும்தார் சாலை அமைக்கவில்லை

சிமென்ட் கலவை போட்டும்தார் சாலை அமைக்கவில்லை


ADDED : ஏப் 04, 2025 01:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2025 01:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிமென்ட் கலவை போட்டும்தார் சாலை அமைக்கவில்லை

கரூர்:கரூர் அருகே, சிமென்ட் கலவை போட்டு பல நாட்களாகியும், தார் சாலை அமைக்கப்படவில்லை. இதனால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளது.

கரூர் அருகே, கோதுார்-மூர்த்திப்பாளையம் வரை புதிதாக தார் சாலை அமைக்க சிமென்ட் கலவையுடன், ஜல்லிக்கற்கள் போடப்பட்டது. அந்த பகுதியில் அரசு பள்ளி, தனியார் நிறுவனங்கள் மற்றும் அதிகளவில் வீடுகள் உள்ளன. ஆனால், உரிய நேரத்தில் கோதுார்-மூர்த்திப்பாளையம் வரை தார் சாலை அமைக்கவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் திடீரென மழை பெய்த நிலையில், சிமென்ட் கலவை பெரும்பாலும் கரைந்து விட்டதால், ஜல்லிக்கற்கள் சாலையில் சிதறியுள்ளன. இதனால், அதன் வழியாக பொதுமக்கள் நடந்து கூட, செல்ல முடியாமல் பெரும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, டூவீலர்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சராகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, கரூர் அருகே கோதுார்-மூர்த்திப்பாளையம் வரை, சிமென்ட் கலவை போடப்பட்ட பகுதியில், உடனடியாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us